உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, March 18, 2012

“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களின் கருத்தாகும்.
மனித குலத்திற்கு விடிவெள்ளியாக மனித நேயத்திற்கு மாணிக்கமாகத் திகழ்ந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதையலாகவே இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்துக் கொள்ளவதற்கு செய்யப்படும் ஆய்வுகள் அதிகமதிகம். அந்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை என்பதே உண்மை.
தினம் பல்லாயிரம் கோடி மக்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே பெயர் “முஹம்மத்”(ஸல்) அவர்கள். அந்தளவு மக்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரில் செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடும் அந்த வெளியீட்டாளருக்கே அல்லாஹ் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தந்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையிலே ஐக்கிய அரபு அமீரகம் பதினோரு மில்லியன் திரஹம் சிலவில் (இந்திய ரூபாய் மதிப்பு பதிநான்கு கோடியே என்பத்தைந்து லட்சம்) நானூற்று இருபது பக்கங்களில் ஆயிரம் கிலோ கிராம் எடையில் ஐந்து மீட்டர் நீலம் நான்கு மீட்டர் அகலம் கொண்ட இந்த உலகின் மிகப்பெரிய நூல் ஒன்றை அதிகமான செலவில் தயாரித்துள்ளது.
அந்த நூல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு உயர் அரசு அலுவலர்களும் மன்னர் குடும்பத்தினர்களும் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் சமூகம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஐம்பதாயிரம் சாதாரன பிரதிகளை தனது சொந்த செலவில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நூலை வெளியீட்டாளர்களின் கருத்தானது “இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ விசயங்களை சாதனைகளாக பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கின்னஸ் தனது புத்தகத்தில் இடம் பெறச்செய்து தனது புத்தகத்திற்கு கின்னஸ் ரிக்காட்டை தனக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே சாலச் சிறந்தது.

இந்நூலை வெளியீட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு இஸ்லாமிய நபிநேச விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மற்றும் நூல் குழுவினர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

11 comments:

NM.Ibrahim said...

கின்னசுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி இப்ராஹிம்

ஸாதிகா said...

அல்ஹம்துலில்லாஹ்.படிக்கையில் மகிழ்வாக உள்ளது.பகிர்தலுக்கு நன்றிகள்!

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சகோதரி ஸாதிகா

eelatamilan said...

சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
'
'

Basheer Ahamed said...

This is not published any news paper in Kerala. First time we heard about this news through your blog. Thank you very much dear brother. Keep it up. -basheer ahamed cochin.

கிளியனூர் இஸ்மத் said...

Thanks Brother Basheer Ahamed

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களின் இக்கட்டுரைக்கு 2 மாதங்களுக்கு முன்பே சகோ.ஆஷிக் எழுதிய கட்டுரையை தயவு செய்து பார்க்கவும் -http://pinnoottavaathi.blogspot.in/2012/03/blog-post_09.html

எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

Unknown said...

i am very happy to this news.

Unknown said...

i am very happy to know this news.

YASEENIS said...

மாஷா அல்லாஹ்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....